கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில், மாற்று கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர்  நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், அவர்கள் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவினர் கட்சியை கைப்பற்றவும், கொள்ளையடிக்கவும் அதிமுகவிற்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்றும், திமுக வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.