மே தினத்தை முன்னிட்டு நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.!

மே தினத்தை முன்னிட்டு நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.!

chennai Commuter rail

நாளை மே தினத்தை ஒட்டி, சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அஅறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையேயான ரயில் பாதையில் வேலை நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றபடுகிறது. பகல் 12.30 மற்றும் 12.50 மணிக்கு புறப்படும் கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்.

பிற்பகல் 1.50 மற்றும் 2.25 மணிக்கு செங்கல்பட்டு – கடற்கரை செல்லும் ரயில், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்றைய ரயில்கள் = (30.04.2023) 

கன்னியாகுமரி செல்லும் ரயில்களில் வண்டி எண்: 16127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் – காலை 9.00க்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு சென்றடையும். வண்டி எண்: 12633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் – மாலை 5.20க்கு புறப்பட்டு காலை 5.45க்கு
சென்றடையும்.

வண்டி எண்: 16823 ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் – இரவு 8.10க்கு புறப்பட்டு காலை 8.37க்கு சென்றடையும். வண்டி எண்: 22657 தாம்பரம் – நாகர்கோயில்
இரவு 7.30க்கு புறப்பட்டு புறப்பட்டு காலை 7.10க்கு சென்றடையும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube