சந்திராயன் விழுந்தாலும் விதையாக தான் விழுந்தது : ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமாவார். இவர் ஆம்பள திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய  வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. இதனால் சிவன் அய்யா அவர்கள் கண்ணீர்விட்டு அழுகின்ற காட்சிகள் கல் மனதையும் கசிந்துருக செய்தது.

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விஞ்ஞானத்தில் வெற்றி தோல்விகளை விட முயற்சிகளே முக்கியம். சந்திராயன் விழுந்தாலும் விதையாக தான் விழுந்தது. உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறோம் சிவன் அய்யா என்று உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.