அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு

அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு

இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

இதனால்  3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.எனவே 3ம் அணி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை கேசிஆர் சந்திக்கும் நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

தற்போது லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.மேலும் லக்னோவில் மாயாவதியை சந்தித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஏற்கனவே டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *