17 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி,திருப்பூர், தேனி, திண்டுக்கல் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது  எனவும் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.