தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு…!

தமிழகத்தில், கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு.

தென் மேற்கு வங்கக்கடல், அதனையொட்டியுள்ள இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில், கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு.என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.