அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இன்று தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. காலை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.