தமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், காஞ்சிபுரம், நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களான, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube