#BREAKING: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

#BREAKING: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

குமரிக்கடல் முதல் வடதமிழக பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5 நாட்களுக்கு மழை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும், அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு மழை:

தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை தஞ்சை, திருவாரூர், நாகை, நாமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஜனவரி 9,10,11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube