அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

அரபிக் கடலில் தென்கிழக்கு மத்திய கிழக்கு பகுதியில் வளிமண்டல சுழற்சி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், திண்டுக்கல், ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், டெல்டா, மாவட்டங்கள் காரைக்கால், பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில்12 செ.மீ மழையும், திருத்தணி, சிவகிரியில் தலா 7 செ,.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.