அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மேலும், இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube