தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மேலும் சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நாகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைபெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.