காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளாக மாதவராவ் போட்டியிட்டார். 63 வயதாகும் அவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவை தாக்கல் செய்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதனைதொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார். மாதவராவின் மரணம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரின் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததை தொடர்ந்து, அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…