4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…!

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. 

தமிழகத்தில் கடுமையான வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், கடந்த சில நாட்களாக சில இடங்களில், மக்கள் மனத்தை குளிர்விக்கும் வண்ணம் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.