17 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 39 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது, இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை திருவாலங்காடு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்து.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.