அஷ்வின் இடத்தை எட்டிப்பிடித்தது யார் ???

அதுக்குள்ள அஷ்வின் இடத்தை எட்டிப்பிடித்த சகால்!

 இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் பவுலிங் சீனியராக சகால் மாறியுள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் நடைபெறயுள்ளது . இலங்கை நாடு சுதந்திரம் அடைந்து 70 அண்டுகளான நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிதாகஸ் டி-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். 6 லீக் போட்டியின் முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி, ஃபைனலுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கோலி, தோனி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாதாக இந்திய அணி  அஷ்வின், ரவிந்திர ஜடேஜாவை நம்பியிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியில் அதிக அனுபவம் உள்ளவராக சகால் உள்ளார். .

ஆனால், சகால் இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி சில காலத்திலேயே அஷ்வினின் மற்றும்  ரவிந்திர ஜடேஜா  இடத்தை எட்டியுள்ளார். இதற்கு தென் ஆப்ரிக்கவுக்கு எதிரான போட்டியில்க அவர் சிறப்பாக விளையாடியதே காரணம்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment