கொரோனோவை வைத்து சீனா தாக்குதல்-அமெரிக்கா செனட் செக்!

கொரோனோவை வைத்து சீனா தாக்குதல்-அமெரிக்கா செனட் செக்!

உலக நாடுகள்  அனைத்தும் கொரோனா வைரஸ் மீது கவனம் செலுத்தி வருகின்ற  நிலையில், இதனைப் பயன்படுத்தி, சீனா தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க செனட் உறுப்பினர் ஜிம் இன்ஹோப் சீனா மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமெரிக்க செனட் உறுப்பினர் ஜிம் இன்ஹோப், சீனாவை  கடுமையாக விமர்சித்து நேற்று கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உலக நாடுகள் பலகட்ட முயற்சிகளை எல்லாம் எடுத்து வருகிறது. ஆனால் அந்நாடுகள் மீது  சீனா கொடூரமாக பல தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

மேலும்  இந்தியாவில், ராணுவ வீரர்கள், 20 பேரை கொன்று, சீன ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியை உரிமை கொண்டாடும், தைவான், மலேஷியா, வியட்நாம், இந்தோனேஷியா  போன்ற நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில்  அந்நாடுகளுக்கு எதிராக சீனா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு  நாடுகளும் ராணுவத்தில் அதிகம் முதலீடு செய்கின்றன. இதன்மூலம், அவர்களின் ராணுவ திறன் மேம்பட்டுள்ளது. இதில் இவ்விரு நாடுகளும், ஆக்ரோஷமாக வளர்ந்து வருகின்றது. அமெரிக்காவை வீழ்த்தவேண்டும் என்று சீனா முயற்சி எடுத்து வருகிறது;ஆனால் அது நடக்காத காரியம். உலகின் மிக வலிமையான ராணுவம் எங்களிடம் தான் உள்ளது. அதை எங்கள் எதிரிகள், முதலில் உணர வேண்டும் என்று சீனா,ரஷ்யாவிற்கு பகிரங்கமாக  எச்சரிக்கை விடுக்கும் விதத்தில்  அவருடைய பேச்சு அமைந்தது .

 

author avatar
kavitha
Join our channel google news Youtube