மத்திய விஸ்டா திட்டம் ஒரு குற்றவியல் விரயம் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம்.

தலைநகர் டெல்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற திட்டத்தை மத்திய அரசு, செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பிரமாண்டமான 16,921 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டடம், மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது செயலகங்கள், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்திற்காக, 13 ஆயிரத்து, 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்தம், ‘டாடா’ குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவின்போது, இந்த நாடாளுமன்றக் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக தாக்கி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால்,நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி மற்றும் படுக்கை வசதி என பல இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நோயாளிகள் தொடர்ந்த உயிரிழந்து கொண்டியிருக்கின்றனர்.

இந்த இக்கட்டான சமயத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது அவசியமா? என்று கேள்வி எழுப்பி, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம்.

புதிய வீட்டைப் பெறுவதற்காக உங்கள் கண்மூடித்தனமான அகங்காரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் என்றும் மக்களின் உயிருக்கும், வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, கொரோனா  சூழலில், ஏழை மக்களுக்கு நிதி உள்ளிட்ட அனைத்து வகையான உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசு தன்னுடைய விஸ்டா திட்டத்தை ஒதுக்கி வைத்து மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாட்டில் அத்தியாவசியமான மருத்துவக் கட்டமைப்புகளை அதிகமாக ஏற்படுத்தி, மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுபோன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கொரோனா சூழலில்,  மத்திய அரசு செய்யவேண்டிய சிறந்த பணி என்னவென்றால், நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி மக்களைக் காப்பாத்துவதுதான். ஆனால், அதை விடுத்து, பிரதமர் மோடிக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது என விமர்சித்து இருந்தார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

6 mins ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

9 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

10 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

11 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

11 hours ago