மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுகின்றது…அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து…!!

  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்தார்.
  • மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதாகவும் தமிழகத்தில் அதிமுக பாஜக இடையே கூட்டணி தொடரும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு  காணொளி மூலமாக பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அதில் எழும்பூர் மற்றும் கிண்டி ரயில் நிலையத்தில் கட்டப்பட்ட  தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் உள்ளிட்டவை மக்களின் சேவைக்கு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக 23 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மின் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதாகவும் தமிழகத்தில் அதிமுக பாஜக இடையே கூட்டணி தொடரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment