8 பேர் வரை பயணிக்கும் அனைத்து இந்திய கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், பயணிகள் கார்களுக்கு ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கும் ஜிஎஸ்ஆர் வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“8 பேர் வரை செல்லும் மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்,குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் வரைவு ஜிஎஸ்ஆர் அறிவிப்பிற்கு நான் இப்போது ஒப்புதல் அளித்துள்ளேன்.இந்தியாவில் மோட்டார் வாகனங்களை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாற்ற இது ஒரு முக்கியமான படியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம்,மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகமானது,தற்போது வாகனங்களின் பின்பக்கத்தை பாதுகாப்பானதாக மாற்ற முயற்சிக்கிறது. அதாவது,பின்பக்க பயணிகளுக்கு நான்கு ஏர்பேக்குகள் சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கிறது மற்றும் அபாயகரமான காயங்கள் ஏற்படுவதை குறைக்கிறது.
கடந்த ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,நாட்டில் உள்ள வாகன உற்பத்தியாளர்களிடம் ஆறு ஏர்பேக்குகளை வழங்குமாறு வலியுறுத்தியதோடு,ஏர்பேக் மற்றும் தேவையான வாகன மாற்றங்களுக்கான விலையை வழங்குமாறு ஏர்பேக் உற்பத்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.அதனடிப்படையில்,ஏற்கனவே இரண்டு ஏர்பேக்குகளுடன் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில்,மேலும் நான்கு ஏர்பேக்குகளைச் சேர்ப்பதன் மூலம் அதன் விலை சுமார் ரூ.8,000-10,000 ஆக இருக்கும் என்றும்,ஒவ்வொரு ஏர்பேக்கின் விலை ரூ.1,800 முதல் 2,000 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இதனால்,வாகனங்களின் விலைகள் மேலும் சற்று உயரும் என எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…