கொரோனா 3-ஆவது அலை குறித்து மத்திய அரசின் விளக்கம்..!

நாள்தோறும் இந்தியாவில் கொரோனா பரவலின் 2-ஆவது அலை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 4,454 பேர் இறந்துள்ளனர்.

இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து வெளிவராத இந்தியாவில் மூன்றாம் அலையை குறித்து பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே எழுந்து வருகிறது. அதிலும், மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என்ற கருத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு வரும் என்பதற்கு இதுவரை எந்தவொரு அறிகுறியும் தோன்றவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.