மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் “ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கார் யோஜ்னா” திட்டம். இந்த திட்டத்தின் நோக்கம் கொரோனா காலத்தில் வேலை இழப்பை ஈடு செய்யவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவது.
இந்த திட்டத்தின் மூலம் 1.10.20 முதல் 30.06.21 வரை புதிதாக வேலையில் சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி சந்தா முழுவதையும் நிபந்தனைகளுக்குட்பட்டு மத்திய அரசு செலுத்தும் என கூறியுள்ளது. இதுகுறித்து நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் கணேஷ்குமார் கூறுகையில், அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஆயிரம் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சந்தா 12% மற்றும் தொழிலதிபர் சந்தா 12% மட்டும் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு செலுத்தும்.
ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை புதிதாக பணியமர்த்தப்பட்ட அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான 12 சதவீதம் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு செலுத்தும். பிஎஃப் அமல்படுத்தப்பட்டுள்ள நிறுவனத்தில் 1.10. 2020 க்கு முன் வரை உறுப்பினர் ஆகாமல் யுஏஎன் நம்பர் பெறாமல் ரூ.15,000 குறைவான ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.
மேலும், கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை யுஏஎன் நம்பர் வாங்கி ரூ.15,000 குறைவான ஊதியம் வாங்கி வேலையை விட்டு விலகி 30.9.2020 வரை வேறு எங்கும் பணியில் சேராமல் இருந்தால் இந்த திட்டத்தில் பயன் பெறுவர் என தகவல் தெரிவித்துள்ளார்.
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…