சபரிமலை கோவில் தொடர்பாக வன்முறை…. கேரள ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவு….!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தும் முயற்சியில் கடந்த வாரத்தில் இரண்டு பெண்கள் போலீசார் பாதுகாப்புடன் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர். இதையடுத்து கேரளாவில் கண்ணூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில் கேரளாவில் தற்போதைய சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேரள ஆளுநர் பி. சதாசிவத்திடம் அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment