மாதம் ரூ.15,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! 12th முடித்திருந்தால் போதும்..உடனே விண்ணப்பிங்க..!

மாதம் ரூ.15,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! 12th முடித்திருந்தால் போதும்..உடனே விண்ணப்பிங்க..!

AAICLAS

AAICLAS நிறுவனம் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS), அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தேவை மற்றும் செயல்திறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிகண்டங்களை நிரப்ப ஆற்றல் மிக்க விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பதவி:

AAICLAS நிறுவனம், பாதுகாப்பு ஸ்கிரீனர் பணியில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.

வயது:

பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

தகுதி:

  • பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 12வது அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • செல்லுபடியாகும் BCAS ஸ்க்ரீனர் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம், ஹிந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியைப் படிக்கும்/பேசும் திறன்.

விண்ணப்பிக்கும் முறை:

  • பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவர் முதலில் AAICLAS -யின் www.aaiclas.aero அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் இருக்கும் Notification அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு, அறிவிப்பில் இருக்கும் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர் இணைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது விமான நிலைய இயக்குனர், இந்திய விமான நிலைய ஆணையம், SGRDJI விமான நிலையம், அமிர்தசரஸ்-143101 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
  • தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்ட தேதி, நேரம் மற்றும் இடத்தில் நேர்காணலுக்கு வர வேண்டும். மேலும், அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

சம்பள விவரம்: 

பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும்.

கடைசி தேதி:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் எந்த வகையிலும் பரிசீலிக்கப்படாது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube