ரெம்டெசிவிர் மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்திவைக்க – மத்திய அரசு முடிவு..!

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகளில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிரின் உற்பத்தி ஒரு மாதத்திற்குள் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில், 10 மில்லியன் ரெமிடெசிவிர் ஊசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், மே மாதத்தில் அதன் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ளது என்று அவர் கூறினார். அவர் ட்வீட் செய்துள்ளார். ஏப்ரல் மாதம் ரெம்டெசிவிர் மருந்தின் தினசரி உற்பத்தி 33,000 குப்பிகளாக இருந்தது. தற்போது 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 லிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ரெம்டெசிவிர் மருந்தை மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் தேவைக்கு அதிகமான ரெம்டெசிவிர் வினியோகம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

murugan

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

3 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

4 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

6 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

7 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

7 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

7 hours ago