#Breaking:அக்னிபத் திட்டம்;இந்த பிரிவில் 10% ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு!

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு.முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனிடையே,பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்தார்.அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கான பயிற்சி டிசம்பர் மாதத்தில் மையங்களில் நடைபெறும் என்றும் செயலில் உள்ள சேவை 2023 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். joinindianarmy.nic.in -ல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில்,இத்திட்டத்தின்கீழ் துணை ராணுவத்தில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை,அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்,சிஏபிஎஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச நுழைவு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.அதன்படி,அக்னிபத் திட்டத்தின் முதல் தொகுதிக்கு இந்த தளர்வு 5 வருடங்களாக இருக்கும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment