CBSE தேர்வுகள் பள்ளிகளிலேயே நடத்தப்படும் – மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை

சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மத்திய மனித மேம்பாட்டுவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிஎஸ்இ தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்றும், வேறு தேர்வு மையங்களில் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.