ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வு…! தேர்வு தேதியை மாற்ற சிபிஎஸ்இ இயக்குனருக்கு சு.வெங்கடேசன் கடிதம்…!

ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வு…! தேர்வு தேதியை மாற்ற சிபிஎஸ்இ இயக்குனருக்கு சு.வெங்கடேசன் கடிதம்…!

சிபிஎஸ்சி தேர்வானது ரம்ஜான் திருநாள் அன்று நடப்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும். சிபிஎஸ்சி இயக்குனருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா விதி முறைகளை கையாண்டு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டிருந்தார்.

சிபிஎஸ்சி தேர்வானது ரம்ஜான் திருநாள் அன்று நடப்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்ட தேர்வு தேதிகளை சுட்டிக்காட்டி, சிபிஎஸ்சி இயக்குனருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube