சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

9 முதல் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாட்டிலும் உலகிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் பார்க்கும்போது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை  மாற்றி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க அறிவுறுத்தப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.1500-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டது.கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube