தனிதேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் தேர்வு- சிபிஎஸ்இ அறிவிப்பு..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனிதேர்வர்களுக் கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை தேர்வு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிதேர்வர்களுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

தனிதேர்வர்களுக்கான தேர்வு தேதிகளை வெளியிட்ட சிபிஎஸ்இ, பள்ளிகள் வழக்கமான மாணவர்களுக்கு யூனிட் தேர்வு, mid term தேர்வுகள் நடத்தியுள்ளன இத்தகைய சூழ்நிலையில், தனிதேர்வர்களுக்கான செயல்திறன் குறித்த பதிவு பள்ளிகளில் கிடைக்கிறது. எனவே, வழக்கமான மாணவர்களின் மதிப்பீட்டு முறையை பின்பற்ற முடியாது, தனிதேர்வர்கள் தேர்வு எழுதுவது அவசியம் என  சிபிஎஸ்இ கூறியது.

தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும், மேலும் உயர்கல்வியில் சேருவதில் அவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படாமல் இருக்க அவர்களின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார்.

 

author avatar
murugan