தந்தை ,மகன் கொலை வழக்கு – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தந்தை ,மகன் கொலை வழக்கு – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ

Default Image

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில்  சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதலில்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை சிபிஐ விசாரித்தது.விசாரணைக்கு பின்னர் காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.இரண்டாவதாக கைது செய்யப்பட்ட  வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது . இதனையடுத்து 3  காவலர்களும்  சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொரோனா காரணமாக  காவலர் பால்துரை உயிரிழந்தார். ஒரு சில சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில்இந்த வழக்கில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube