சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனர் பணி நியமனம்..!

மத்திய பணியாளர்த்துறை அமைச்சகம் சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்-ஐ நியமித்துள்ளது.

சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த 1985 ஆம் ஆண்டு ஐபிஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். மேலும், இவர் இம்மாநில காவல் டிஜிபி ஆகவும் பணிபுரிந்துள்ளார். இப்போது இவரை இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக அறிவித்துள்ளனர். இந்த முடிவை பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கலந்தாலோசித்து நியமித்தனர்.

ஆனால், இதில் எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன்சவுத்ரி இந்த ஆலோசனைக்கூடத்தில் எடுக்கப்பட்ட தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இவர் அளித்த பேட்டியில், சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் கமிட்டியின் விதிமுறைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது இந்த முடிவு. நான் கடந்த 11ஆம் தேதியே 101 பேர் அடங்கிய பட்டியலை வழங்கினேன். அதில் 10 பேரை மட்டும் பட்டியலிட்டு, அதன் பிறகு அதில் மாலை 4 மணிக்கு 6 பேர் மட்டுமே அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். மத்திய பணியாளர்த்துறை அமைச்சகத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளனர்.

மேலும், கடந்த பிப்ரவரி மாதமே சிபிஐ இயக்குனராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்று சென்றுவிட்டார். அடுத்த 3 மாதங்களாக குஜராத் பிரிவின் ஐபிஸ் அதிகாரியான பிரவீன் சின்ஹா பொறுப்பு இயக்குனராக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

6 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

8 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

10 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

11 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

11 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

11 hours ago