#BREAKING : தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை

தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது .

சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன்  சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் மேலும் வழக்கினை இன்றே கையில் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

 டிஐஜி பிரவீண்குமாரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தமிழ்ச்செல்வி நீதிமன்ற உத்தரவின்படி மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஓப்படைத்தார்.இந்நிலையில்  தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது .நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவிடம் இருந்து ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டார் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார்.