ஆகஸ்ட் 31-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்..!

டெல்லியில் ஆகஸ்ட் 31-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ளது. 

டெல்லியில் வருகின்ற 31-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.

 

author avatar
murugan