இடதுசாரி கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து..!

இடதுசாரி கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இடதுசாரி தலைவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி சதீஷ்குமார், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை எனவும் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல எனக்கூறி வழக்கு ரத்து செய்தார்.

இதனால், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர்மீதான வழக்குகளை ரத்து செய்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube