#BREAKING: 5 மாநில தேர்தலை ரத்து செய்ய கோரி வழக்கு..!

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே 3 கட்டங்களாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலை தொடர்ந்து 5 மாநிலங்களில் தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கறிஞர் எம்.எல் சர்மா தொடர்ந்த வழக்கை மார்ச் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

author avatar
murugan