” அரசு விழாவில் தேசியகீதம் ” வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்….!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதே போல திருப்பூரில் கலந்து கொண்ட பிரதமர் அங்கேயும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த இரண்டு நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சியாகும்.இதில் அரசு அதிகாரிகள் , தமிழக முதல்வர் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அரசு விழாவில் தேசியகீதம் பாடததற்கு கண்டனம் என்று பலரும் கூறினர்.இந்நிலையில் இது தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பிரதமர் பங்கேற்கும் விழாவில் தேசிய கீதம் பாட வேண்டுமென்று கட்டாயமில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment