ரத்து செய்த பிரிவில் வழக்கு – மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
ரத்து செய்த பிரிவில் வழக்கு – மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ-வில் வழக்குப்பதிவு செய்வதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
ரத்தான ஐடி சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்வதற்கு எதிரான வழக்கில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ கடந்த 2015ல் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில், காவல்துறை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என கூறியுள்ளது.