சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு…! இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை…!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்  சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது. சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இன்று  விசாரிக்கிறது.

 

 

Leave a Comment