#ElectionBreaking: திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

#ElectionBreaking: திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தது. இதனைதொடர்ந்து 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறவும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்-ல் ஆபாசமாகவும், மிரட்டும் வகையில் பேசியதாக திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது தேர்தல் அதிகாரிகள் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Join our channel google news Youtube