நடிகர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு.!

நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிவகுமார் திருமலை திருப்பதி கோவிலில் தவறு நடப்பதாகவும் அங்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் ஒரு நிகிழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திருப்பதி சொத்துக்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் எதிராக பேசியவர்களை பட்டியலிட்ட வெளியிட்ட தேவஸ்தானம் நடிகர் சிவகுமார் உள்பட 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல். 

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல்நிலையத்தில் நடிகர் சிவகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது , இந்தப் புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொண்டு நடிகர் சிவகுமார் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் நடிகை ஜோதிகா பேசிய வீடியோ ஒன்றும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.