வெற்றியை எதிர்த்த வழக்கு.., ஓ.எஸ் மணியன் பதில்தர ஆணை..!

தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேதாரண்யத்தில் ஓ.எஸ் மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருவேறு சமூக மக்களிடையே விரோத்தை தூண்டி ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதாக மனுதாரர் தரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓ.எஸ் மணியன், தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
murugan