#BREAKING: ராஜகோபாலன் மீதான குண்டர் வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு..!

ராஜகோபாலன் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி வழக்கில்  தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்க உத்தரவு .

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது மனைவி சுதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தொடர்ந்த மனுவில், மாணவியின் புகாரில் 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டில் ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தாமதமாக அளிக்கப்பட்ட புகார் அளித்த தகவலின் அடிப்படையில் குண்டாஸ் போடப்பட்டது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, வழக்கில், தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

author avatar
murugan