பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதற்கு எதிராக வழக்கு..!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே 3 கட்டங்களாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலை தொடர்ந்து 5 மாநிலங்களில் தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பிரதமர் நாட்டு மக்களுக்கு பொதுவானவர் இதனால், 5 மாநில தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட பிரதமர், மத்திய அமித்ஷா மற்றும் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan