ஜெ.நினைவு இல்லத்திற்கு எதிரான வழக்கு – தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

ஜெ.நினைவு இல்லத்திற்கு எதிரான வழக்கு – தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா  மறைந்த நிலையில் ,அவர் வசித்து வந்த, போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ஆம் ஆண்டு  முதலமைச்சர்  பழனிசாமி  அறிவித்தார். பின் தமிழக அரசு போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது.மேலும் தமிழக அரசு நினைவில்லமாக்க அவசர சட்டத்தையும் பிறப்பித்தது.

இதனிடையே  போயாஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது.இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.இதனைத்தொடர்ந்து  உயர்நீதிமன்றம் வழக்கினை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

Join our channel google news Youtube