இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு – விரிவான விசாரணைக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவு!

இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு – விரிவான விசாரணைக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவு!

Edappadi K Palaniswami

சொத்து விபரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் விரிவான வ்விசாரணை நடத்த உத்தரவு.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யும்போது எடப்பாடி பழனிசாமி பிராமண பத்திரத்தில் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விரிவான விசாரணை நடத்த குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரரான திமுக நிர்வாகி மிலானிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் குற்றப்பிரிவு காவல்துறைக்கு, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் பி.மிலானி தொடர்ந்த வழக்கில் சேலம் சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube