தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு – அதிமுக எம்.பி ரவீந்திரநாத் நேரில் சாட்சியம்!

வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது உள்ளிட்டவை குறித்து ரவீந்திரநாத்திடம் கேள்வி.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை வயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் எம்.பி ரவீந்திரநாத்.

நிறுவனம் ஒன்றின் இயக்குனராக இருந்தது, வங்கியில் கடன் வாங்கியது குறித்து ரவீந்திரநாத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது உள்ளிட்டவை குறித்தும் ரவீந்திரநாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ரவீந்திரநாத்திடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment