சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்!

கேரட்டை பயன்படுத்தி, முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி முக அழகை மெருகூட்டுவது எப்படி என்று பார்ப்போம். 

நாம் அனைவரும் சரும அழகை பாதுகாப்பதோடு, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து  கொள்ள பல வழிமுறைகளை கையாள்வது உண்டு. அவ்வாறு கையாளும் வழிமுறைகள் இயற்கையானதாக இருந்தால், சிறப்பாக இருக்கும். தற்போது இந்த பதிவில் சரும பிரச்சனைகள் போக்க, இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • கேரட்
  • சர்க்கரை

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சர்க்கரை மற்றும் கேரட்டை பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் சரியான இரத்த ஓட்டம் காணப்படும். மேலும், இதில் உள்ள பொட்டாசியம், முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி முக அழகை மெருகூட்டுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.