திருச்சி அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதல்.! 2 பேர் பலி, 8 காயம் .!

திருச்சி அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதல்.! 2 பேர் பலி, 8 காயம் .!

  • முசிறி அருகே உள்ள செவலிங்கபுரம் என்ற இடத்தில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி  விபத்து ஏற்பட்டது.
  • சம்பவ இடத்திலேயே அழகப்பன், சதீஷ் ஆகிய இரண்டு பேர் இறந்தனர், 8 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே செவலிங்கபுரம் என்ற இடத்தில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது .கோவில்களில் அலங்கார வேலை செய்பவர் காரைக்குடியை சேர்ந்த அழகப்பன்.

இவர் தனது குழுவினருடன் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அழகப்பன் குழுவினர் செவலிங்கபுரம் என்ற இடத்தில் சென்றபோது  சிமெண்ட் ஏற்றுவதற்காக வந்த லாரியுடன் இவர்கள் சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அழகப்பன், சதீஷ் ஆகிய இரண்டு பேர் இறந்தனர், 8 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடலை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மேலும் போலீசா காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube