இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்துள்ள நிலையில் தற்போது தேநீர் இடைவேளை விடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.முதல் நாளான நேற்று இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்தது.இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கியது.ஸ்டோக்ஸ் மற்றும் ரூட் ஜோடி சிறப்பாக விளையாடியது.ஓரளவு அதிரடியாக விளையாடி வந்த ஸ்டோக்ஸ் 82 ரன்களில் நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் போப் களமிறங்கி ரூட் -வுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
இந்த போட்டியில் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்த நிலையில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. 147 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் அடித்துள்ளது.தற்போது தேநீர் இடைவேளை விடப்பட்டுள்ளது.களத்தில் ரூட் 209 ரன்களுடனும் ,போப் 24 ரன்களுடனும் உள்ளனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…
Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…
Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…
ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்…